|
News Flash
வீணாலயா மாணவ மாணவியர் கலைவிழா ஆசிரியர் வித்துவான் செந்தூர் செல்வி வாமானந்தன்
மேற்படி விழா 11.7.2010 சிறப்பாக நடந்தேறியது. நடைமுறை ஆண்டுத் சைவ முன்னேற்றச் சங்கத் தலைவர் முன்னின்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பணிகளைக் கொடுத்து அவரவர் தத்தமது கடமைகளைச் செவ்வனவே நடத்தியதைக் கவனிக்கக் கூடியதாக இருந்தது.
பெருந்தொகையான மாணவ மாணவிகள் தொண்டார்வத்தோடு பங்கு பற்றி சிறப்பித்தைமை பாராட்டுக்குரியது, மண்டபம் நிறைந்திருததைப் பார்க்கும் போது எம்மவரும் எமது குழந்தைகளும் இந்நாட்டில் கலை வளர்வதற்குப் பின் தங்கியவர்கள் இல்லை என்பதை நேரே காணக்ககூடியதாக இருந்தது. மேடைக் கூச்சமின்றி மாணவ மாணவியர்கள் தமது ஆற்றலை வெளிக்காட்டியது பாராட்டுக்குரியது. அத்தோடு கலை ஆசிரியர் இவ்வளவு மாணவ மாணவியர்களையும் தன் கண் அசைப்பால் மேடையில் இவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தையும் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.
இவ்விழாவால் சேர்கப்படும் தொகை சைவமுன்னேற்றச் சங்கம இலங்கையில் உள்ள குழந்தைகளுக்காற்றும் பணிக்களுக்காகக் கொடுக்கப்பட்டது. இத்தொண்டார்வம் குழந்ைதகள் மத்தியிலும் பார்வைரயாளர் மத்தியிலும் காணக்கூடீயதாக இருந்ததது.
சங்கப் பொருளாளர் பேசும் போது மாணவர்களின் தொண்டாற்றும் ஆற்றலைப்பபாராட்டினார்.
திரு சிதம்பரப்பிள்ளை தமது உரையில் சங்கத்தின் சிரமதானத் தொண்டிடல் ஈடுபடுவதற்கு மக்களை சங்கத்திற்குப் பணம் கொடுத்துதவமாறு கேட்டுக் கொண்டார்
கலை ஆசிரியர் ரதிகோனின் நால்வர் பள்ளி ஆசிரியர் சுகிர்தகலா மாணவியர்கள் பரதநாட்டியம் பலரையும் கவர்ந்தது.
பிரதமவிருந்தினராக திருமதி அம்பிகா தாமோதரன் வருகை தந்திருந்தார்கள். சிறப்பு விருந்தினராக திருமதி ஜெயா அருணகரிநதான் அவர்கள் கலந்து கொண்டார்கள்,
மண்டபம் நிறைந்த கூட்டம் ஆசிரியரின் ஆற்றலைப் பிரதி பலித்தது, தனித்து நின்றும் சேவை செய்யலாம் என்ற எண்ணத்தை ஆசிரியர் மக்கள் மனதில் பதித்து வைத்தார் வாழ்துகள்
மேற்படி விழாவிற்கு வீணா மொத்த விறபனையாளர், பார்கிளே வங்கி, வள்ளி பூக்கடை ஸ்தாகத்தினர் ஆகிேயார் பொருள் உதவி வளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீணாலயா மாணவ மாணவியர் கலைவிழா உறுப்பினார்கள் இத்தாபனங்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்..
|